அகத்தைத் தீயாக்கி அக்கினித் தீபங்கள் ஏற்றுவோம்…

“தமிழர் படையின் பெருமாயுதம்
உலகம் வியக்கும் போராயுதம்
உறுதி சுமந்த உணர்வாயுதம்
இதுவே எங்கள் உயிராயுதம்…”

அண்ணனின் காலம் அதி பலமானது
கரும்புலி வீரரின் காவியக் கொடையால்.
அதிசயம் பல ஈழத்தில் நேர்ந்தது
கரும்புலி வீரரின் புயல் மிகு நடையால்.

உருகி மனதால் கரையும் பொழுதை
உயிரை வீசி எழுதிய போர் முனைகள்.
உள்ளம் உயிர் உடல் உடமை
யாவும் ஈர்ந்த தேச உயிர்க் கணைகள்.

எழுத முடியாக் காவிய வெடிகளை – ஈழம்
மறைத்து வைத்து வணங்கும் மர்மம்.
எமக்காய் வெடித்து துகளான பொறிகளை
என்றைக்கும் இனம் தாங்குதல் தர்மம்.

கந்தகம் சுமந்து சிரித்த முகங்கள் – எங்கள்
கண்களில் இன்றும் நினைவிருக்கு.
கடைசி நாள் பூமியில் உள்ளவரை – இந்த
புயல் மன மர்மங்கள் வாழ்விருக்கு….

கலைப்பரிதி.