அனுபவப்பாடங்கள் இங்கே கவிதையானது


அன்பில்லாதோர்வாழ்வு
அலங்கோலமாகிறது

ஆணவம்கொண்டவர்வாழ்வு
அழிந்துபோகிறது

பொறுமையில்லாதவர்வாழ்வு
சீரழிந்துபோகிறது

விட்டுக்கொடுக்காதவர்வாழ்வு
பிரிந்துபோகின்றது

பேராசைகொண்டவர்வாழ்வு
நிம்மதிஇழக்கின்றது

இரக்கமில்லாதவர்வாழ்வு
உறவுகளை இழக்கின்றது

நம்பியவர்வாழ்வு
ஏமாற்றத்தில்முடிகிறது

கவனமில்லாதவர்வாழ்வு
இருப்பதைத்தொலைக்கின்றது

படபடப்பவர்வாழ்வு
பாதியிலேமுடிகிறது

பொறாமைகொண்டவர்வாழ்வு
மன உழைச்சலில்முடிகிறது

நாணயமில்லாதவர்வாழ்வு
இருட்டிலே முடிகிறது

பொறுப்பில்லாதவாழ்வு
சந்தோஷத்தை தொலைக்கிறது

கடனில்லாதார்வாழ்வு
இன்பத்தில் மிதக்கிறது

போதும்என்றவர்வாழ்வு
அமைதியாய் நகர்கிறது

பயபக்திகொண்டவர்வாழ்வு
அன்போடு கரைகின்றது

(உங்கள் மயிலையூர்இந்திரன்)

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert