அன்னையர்தின வெளியீடாக நாளை வெளியாகும் #தாய்_மனசின்

அன்னையர்தின வெளியீடாக
நாளை வெளியாகும் #தாய்_மனசின் வரிகளிலிருந்து

அம்மா நீ அழகு தேவதை
நாளும் செய்வேன் ஆயிரம் பூஜை
கண்ணை இமையாய் காத்திடும் தாயி
நெஞ்சில் வாழும் நீயே தாயி
தாயி போல ஏது சாமி
தாயி இல்ல நீயே எங்கள் சாமி
( அம்மா நீ )
ஐயிரண்டு திங்கள் மடியினில் சுமந்தாய்
மெய் வருந்தி எனை உலகிற்கு தந்தாய்
கர்வம் இல்லா கடவுளும் நீயம்மா
ஜென்மங்கள் ஏழும் நீ வேண்டும் அம்மா
பொய் எதுவுமில்லா பிறவி அம்மா
பூரணை நிலவாய் வாழ்வினல் ஒளிர்ந்தாய்
அவ தோரணை எல்லாம் சாமியில் மேல்நிலை
(அம்மா நீ )
சேலையில தூளி கட்டி தாலாட்டு படிப்பாள்
சேயாகி நான் தூங்க நவரசம் பொழிவாள்
தவமின்றி கிடைத்த மகராசி அவளே
தாயாகி தலை கோதி எனை ரசித்து மகிழ்வாள்
வேரோடி விழுதாகி எனை தாங்கி நிற்பாள்
தூசி பட்டாலும் தவியாய் தவிப்பாள்
அவள் தாய்மடி தந்து நோய் நொடி தீர்த்திடுவாள்
( அம்மா நீ )

இசை_பிரியன்
குரல்_பிரசாத்
வரிகள்_பவளம் பகீர்
ஒளிப்பதிவு_திரு ஸ்ரூடியோ.