அன்னையே உனக்காக …! கவிதை குமாரு. யோகேஸ்

கருவிலும் கருத்திலும்
என்னை சுமந்த என் அன்னையை
என் உள்ளத்திலும் உயிரிலும்
காலமெல்லாம் நான் சுமக்கவேண்டும் !

அடுத்த பிறவியில் அவள் என்பிள்ளையாக
வரவேண்டும் !
அள்ளியெடுத்து நான் சீராட்டவேண்டும்
பசியறிந்து நான் பாலூட்ட வேண்டும்
என் மடியில் வைத்து தாலாட்ட வேண்டும்
இறைவா இந்தவரம் நீ தந்திடவேண்டும் .
அன்பு அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்….

ஆக்கம் குமாரு. யோகேஸ்

Merken

Merken

Merken

Merken