அன்பானவன்..

ல்லோர்க்கும்
எல்லாமே பொருந்தி
விடுவதில்லை.

இவருக்கு
இவர் நாமமும்
மிகப் பொருத்தம்.

இவன் அன்பு.
அறிவிப்பாளனாய்
நடிகனாய் கலை உலக
பிரவேசம்.

தேச பக்தனாய்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளனாய்
வாழ்ந்ததுண்டு.
ஆர்வமும் ஈழக் கலைஞர்
மோகமும் கொண்டவர்…

குறும் படங்களில்
தோன்றி தயாரிப்பாளனாகி
இயக்குனனாகி
பல பரிமாணங்கள்.

டென்மார்க் நகரில்
அந் நாட்டு அரசியலிலும்
கால்பதிக்கும் காலத்துக்கு
ஈழத் தமிழனிவன்
வளர்த்துக் கொண்டான்.

மனைவியை
பாடலாசிரியாக்கி
மகனை இசை அமைப்பாளனாக்கி
இசைத் தட்டுக்களை
வெளிவிடும் துரித
வளர்ச்சிப் பாதையில்
நீண்ட தடம் பதிக்கும்
இவர்களை வாழ்த்துவோம்
போற்றுவோம் வாரீர்.

ஆக்கம் கவிஞர்தயாநிதி