#அவசர_உலகில்_ஆனந்தம்_பாதிதான் !கவிதை ஜெசுதா யோ

விடுமுறை என்றதும்
எத்தனை சந்தோசம்
ஊருக்கு போகலாம்
உறவுகளைக் பார்க்கலாம்

அவசர உலகில்
ஆனந்தம் அதிகம்
விரைந்து சென்று
விடுமுறை கழித்திட

காலனோ கணக்கொன்று போட
கடுகதி வாழ்வில்
சடுதியில் பல மோதல்
பாதி உயிர் பிரிந்து
மீதி உயிர் ஊசலாட..

அங்கங்கள் இழந்து
துன்பங்கள் சேர
விடுமுறைகள் எல்லாம்
மருத்துவ மனையும்
இழவு வீடுமாக
இடையில் போக…

ஏன் இந்த அவசர வாழ்க்கை
எத்தனை எத்தனை உயிர்கள்
இடையில் பறி போகுதெ
நடக்கும் விபத்தையெண்ணி
இதயம் வெந்து போகுதே

நாளும் பொழுது
வரும் செய்திகள்
பார்த்து நெஞ்சம் பதைக்கிறது
தூங்காது துயரம் சுமக்கிறது உறவுகளே…

வேண்டாமே இந்த அவசரம்
இருப்பவை இருக்கும்
மெதுவாக சென்று பார்த்து
ஆனந்தத்தோடு திரும்பலாமே…//

ஆக்கம் ஜெசுதா யோ