-ஆனந்தவாழ்வு -கவிதை மயிலையூர்இந்திரன்“

 

வாழும் வயதில் வாழாமல்
சாகும்வயதில் வாழமுடியாது
ஆனந்தமான மனிதவாழ்வு
அன்பாலே நிரந்தரமாகும்
பிடிவாதக்குணங்களும்
நான் என்ற ஆணவமும்
அன்பை அழித்துவிடும்
குடும்பத்தைக்குலைத்துவிடும்
மனைவி கணவனிடம்
கணவன் மனைவியிடம்
தோற்றுப்போவதே பேரின்பப்பெருவாழ்வு
குடும்பம் என்ற குலவிளக்கு
எம் சந்ததியின் ஒளிவிளக்கு
இதை அணையாமல்பார்ப்பதே
வாழ்வின் நிரந்தர வெற்றி
மனதை ஆறுதலாக்குங்கள்
அன்பை நிரந்தரமாக்குங்கள்
சிந்தித்து நடவுங்கள் சீராக வாழுங்கள்
„“ ஆனந்தவாழ்வு உங்கள் கையில் „“

ஆக்கம்கவி-மயிலையூர்இந்திரன்“

Merken