ஆனந்த சாமி..!கவிதை கவிஞர் தயாநிதி

 

சாமி
காட்டிய
அழகிய
சாமி…

கண்
முன்னே
நடமாடி
பேசசிய
சாமி..!

பேசவைத்த
பெரும் சாமி
அகரமுரைத்த
அற்புத சாமி
அன்னமூட்டிய
உன்னத சாமி…!

படைத்தவன்
வாசலில்
தவமிருக்கும்
தத்துவ சாமி
தாயெனும்
கருணைச் சாமி.!

உயிர்மெய்
எழுத்தால்.
உருவான
அம்மாச் சாமி.
உயிர்ப்பான
உண்மைச் சாமி.!

ஊர்க் கண்
உறவுக் கண்
படாமல்
பாதுகாத்த
ஆத்தா சாமி.;!

ஆதரிக்க
யாருமின்றி
அலையும்
அநாதையாய்
வீதியில் நிற்கும்
விதி வரைஞ்ச சாமி.!

தானம்
வேண்டாம்
அவதானம்
கொள்ளுங்கள்
தாய் மடி
தவறின்
சொர்க்கம்
வேறெங்குமில்லை;;!

ஆக்கம் கவிஞர்தயாநிதி