ஆற்றலுக்கு குறைவில்லை.


ஈழவர் வரலாற்றில்
இது வரை சாதித்த
பெண்கள் வரிசையிலே
போராளிகள்.கவிஞர்கள்
எழுத்தாளர்கள்.கலைஞர்கள்
என பல் துறை ஆற்றல்
நிறைந்தவர்களை பார்த்ததுண்டு.

நாடகங்கள் குறும் படங்கள்
திரைப் படங்கள் என
இயக்கியவர்கள் ஒரு சிலரே.
அவர்களில்துஷியந்தன் பாமினி
நான் குறிப்பிட்டவற்றை சாதித்து
காட்டிக் கொண்டிருப்பது கண்கூடு.
அண்மையில் இயக்கிய நாடகத்தையும்
கண்டு களிக்கும் வாய்ப்பும் கிட்டியது.

பேர்லின் நகரில் தனித்துவமான
ஆசிரியை.பல மாணவிகளை
உருவாக்கி அவர்களையும்
ஆசிரியராக்கிய பெருமைக்குரியவர்.
நாலுவரிகளில் நறுக்காக கவிதைகளை
எழுதி மனங்களில் வாழ்பவர்..

சமையல் கலையிலும் வல்லவர்
என்பதனை முகநூலில் படையலை
பதிவாக்கி பார்ப்பவர்க்கு பசியை
தூண்டி விடும் வல்லவர்….
சுமைகளை சாதகமாக்கி
சாதம் வடித்துக் கொண்டிருப்போர்
மத்தியில் எடுத்துக்காட்டானவர்.
பாசறைப் பயிற்சியாளர். இவர்களை
வாழ்த்தி வரவற்போம் வாருங்கள்.
வாழ்க பாமினி வாழியவே….

மூத்த எழுத்தாளர் கவிஞர் தயாநிதி