„இசைக்கலைமணி“ என்னும் பட்டயச்சான்றிதழினை பெற்றிருக்கின்றார்கள். செகசோதி,கெளரி,செகசோதி

சுவிஸ் நாட்டின் சங்கீதாலய நிறுவன இயக்குனர் திரு.ஆறுமுகம் செகசோதி, திருமதி. கெளரி செகசோதி. திரு. நீருஜன் செகசோதி ஆகிய ஆசிரியர்களின் மாணவிகள் செல்வி. அஜானா தயானந்தன், செல்வி. வைஷ்ணவி வரதராஜா ஆகியோர் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தால் நடாத்தப்பட்ட இசைத்துறைக்கான ஆற்றுகைத் தேர்வில் வாய்ப்பாட்டு, வயலின், வீணை ஆகிய மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப் பெற்று „இசைக்கலைமணி“ என்னும் பட்டயச்சான்றிதழினை பெற்றிருக்கின்றார்கள். புலம்பெயர் நாட்டில் கடுமையான புறச்சூழலில் மத்தியிலும் தமிழ்க்கலையினை ஆர்வத்துடன் கற்று இசைத்துறையின் இளம் ஆசிரியர்களாக வளர்ந்துவரும் செல்வி. அஜானா தயானந்தன், செல்வி. வைஷ்ணவி வரதராஜா ஆகியோருக்கு அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.