இசை…

சூரிய மேளம் எடுத்து
காலம் தாளம் வாசிக்கிறது.
இசையை உலகம் சுவாசிக்கிறது.
இதயம் வாழ்வை யாசிக்கிறது.

இழந்து படும் சோகத்தில் இசை
எழுந்து விடும் தாகத்தில் இசை
கரைந்து தொடும் மோகத்தில் இசை
களங்கள் இடும் வேகத்தில் இசை

முகையவிழ்க்கும் மலரில் இசை
மூச்சிறைக்கும் உயிரில் இசை
மேவி எழும் அலையில் இசை
கூவி வரும் கணையில் இசை

உருவம் தெரியும் பிறப்பில் இசை
உயிர்கள் பிரியும் இறப்பில் இசை
மனங்கள் தொடும் நுகர்வில் இசை
மர்மம் சுடும் நகர்வில் இசை

இசையை அசைபோட்டபடியே
யாவும் அசைகிறது…

கலைப்பரிதி.