இழப்புக்கள்
இல்லாமல்
சுதந்திரம் ஏதடா..
அழுவதால்
ஆவது ஒன்றும்
இல்லையடா…
விழிப்பது
ஒன்றே இன்றைய
தேவையடா..
தொழுவதை
தாண்டியும் மனிதனை
மனிதன் மதிப்பதை
தொடங்கடா….
வென்றாக
வேண்டுமெனில்
ஒன்றாகும் வழி தனை
உருவாக்கடா…
நான் நீ
எனும் பேதமையை
கொழுத்தடா..
இதயத்தில்
பறக்கும் தேசியக் கொடி
அகிலத்தில் பறக்கும்
நாளே சுதந்திர தினமடா…
ஆக்கம் கவிஞர்தயாநிதி