இதமான காற்று!

இதமான காற்று
இளம் காலை பனித்துளி
பாடும் பறவைகள்
கூவிடும் குயில்கள்..

அதிகாலை பிறந்ததாய்
அறைகூவும் சேவல்கள்
ஆலைய மணியின் ஓசை
அம்மாவி ஆரவாரம்.

இவற்றிடையே
சிவந்த வானில்
மெல்லென மேலெழும்
சூரியன் ,…..எத்தனை அழகு ..

எல்லாம் இழந்திங்கே நாங்கள்
இயந்திரமாக வாழும் இந்த வாழ்வில்
மகிழ்ச்சியைத் தொலைத்து
மனதினில் பாரத்தோடு
நாளும் புலரும் பொழுதோடு
நகர் வலம் வருகிறோம்
புலத்தில் நாங்களே…

„*ஜெசுதா யோ“*