இதயம் ஏங்குதே..!கவிதை ஜெசுதா யோ

உன்னைக் காணாது
உன்னோடு பேசாது
இதயம் கனக்கிறது
இமைகள் நனைகிறது
வார்த்தைகள் இன்றி நான்
வலியால் துடிக்கிறேன்….//

காத்திருப்பு சுகமென்று
யார் சொன்னது..?
எத்தனை வலியென்று
இதயம் ஏங்குதே..!
மூச்சு கூட சுமையாக இருக்கிறதே..!!

நினைவுகள் மட்டுமே
எனதாகிப் போகுதே
கனவுகள் வேண்டி
கண்மூட நினைக்கிறேனே…!!

வருவதும் போவதுமாய் நீ
சுவாசிக்க காற்று தேடினேன்
வெற்றுக் கூட்டில்
வெதும்பி போகிறேன்
அனலாக உடல்…
தொட்டுப் பாக்கிறேன்
உணர்வற்ற என் உடலை…!!

காத்திருக்கிறேன்
உனக்காக நான்
வழி பார்த்து இருக்கிறேன்.,
விழிகள் மூடாது நானே..

ஆக்கம் ஜெசுதா யோ