சின்னதான உன்
குரல் வாட்டம்
என் மனம்
வாடுகிறது
சின்னதான உன்
கவலை
என் இதயத்தின்
வலியாகிறது…
சின்னதான உன்
மௌனம்..
என் உயிர் போகிறது..
உன் அசைவுகள்
ஒவ்வொன்றும்
என் இன்பத்தின்
சோகத்தின்..
இசையாகிறது…
என்னவனே..
என்னை நீ
புரிந்தாயே
இல்லையோ
நானறியேன்
உன்னைப் புரிந்தவளாய்
நான் வாழ்வேன்
உனக்காக மட்டுமே
உனக்கு ஆயிரம்
உறவிருக்கலாம்
எனக்கு நீ மட்டுமே உயிர்
உனக்கு சுமையாகத்
தெரியலாம் இன்று
எனக்கு நீ மட்டுமே உயிர்
உண்மையோ
பொய்யோ
நீயுரைத்தால்
நம்புவேன் நானே
என்னை விலக்கி
நீ போனால்
அறிந்தும் அறியாது
இருப்பேன் நானே
அன்றில்லை
இன்றில்லை
என்றும்
நான் அன்பானவள்
உணர மறந்த
உன்னிதயம்
ஓர் நாள் அறியும்
என் வலியை
உனக்காக மட்டுமே
நான் வாழ்வேன்
இல்லையேல்
மண்ணோடு
போய்ச்சேர்வேன்
நீயறியாமலே
உன்னவள்