இந்த நிலா…!கவிதை.ரதிமோகன்

 

இந்த வானத்து
இனிய நிலா
நட்சத்திரங்கள்
கூடவர உலா
வந்த வேளையில் …

உதிர்ந்தன சில
நட்சத்திரங்கள்
விலகின சில..

பால்வீதியிலே
பாதை மாறியே
மறைந்தன பல….

தண்ணொளி வீசும்
நிலாவினை கார்
மேகமும் சூழ்ந்தது
இடியோடு மின்னலும்
இடை இடையே வந்து
போனது….

அமாவாசை சிலநாள்
பௌர்ணமியும் சிலநாள்
வந்து வந்து போயின
பால் நிலா கண்ணீரில்
நனையவில்லை..

என் வானில் நானே
என்றும் நிலா
என் பாதைவராது
விலத்தி செல்லும்
விண் மீன்களே
விலகி நீங்கள்
செல்லுங்கள்…

சொல்லாத அந்த
வார்த்தைகள்
மௌனமாகியே
முகிலுக்குள் மறைந்த
அந்த நிலாவோடு
தன்னம்பிக்கை மட்டுமே
கூடவே சென்றது….

ஆக்கம் ரதிமோகன்