இன்ப நதி ஒன்று…கவிதை கவிஞர் ரதிமோகன்

பொய்கையை நிறைக்கும் ஆம்பல்கள்
மனப்பொய்கையில் பூத்தது
பொன்னகையும் தோற்கும் அவன்
புன்னகையில் விழிகள் மயங்குது

மயக்கத்தில் பாதி உறக்கத்தில் மீதி
கிறக்கத்தில் கிறுக்கும் வரிகளுக்குள்
உயிர்க்கட்டும் உசிரான காதலென்று
உள்ளம் அது பேசியது..

இன்பநதி ஒன்றின் பெருக்கெடுப்பில்
இனிய நிலா முகம் காட்டுது
இனிக்கும் சுவைக்கும் வாழ்விது
கரும்பின் சாற்றை அள்ளித்தெளிக்குது

ஆக்கம் ரதிமோகன்