இப்படித்தான்….கவிஞர் தயாநிதி

 

உருகுவதும்
கருகுவதும்
ஔிர்வதும்
ஓங்கி எரிவதும்
பிரகாசமாய்
தெரிகின்றது.

ஆனாலும்
அதனடியில்
சூழ்ந்திருக்கும்
இருள் யாருக்கும்
தெரிதில்லை.

வெளி நாடு
வந்தவனின்
வாழ்க்கையும்
மெழுகுக்கு
ஒப்பானதே…

மெழுகு கூட
மீண்டும் பயன்
பெறலாம்.
எங்களுக்கோ
எஞ்சுவதற்கு
ஏதுமில்லை..

பார்க்க
பிரகாசம்..இவன்
வாழ்க்கை
பாயோடும்
நோயோடும்.
சுமையோடும்
கவலையோடும்…

ஆசைகள்
கருகிட
உருவங்கள்
உருகிட
உறவுகள்
விலகிட
உண்மைகள்
ஒழிந்திட
ஒப்புக்கு
ஒரு வாழ்வு
பகட்டாய்
பளபளப்பு….

வெளி நாட்டு
வாழ்க்கை
வெறும்\வெற்று
வாழ்க்கை
வதை படும்
வாதை
வாழ்வாச்சு..!

ஆக்கம் கவிஞர்தயாநிதி