இயற்கையின் ஓலம்



இயற்கையின் ஓலம்
உயிர்வாழ உனக்களித்தக் 
காற்று மாசுபடுவதும் 
மனிதா உன்னால் தானே ?

பொழிகின்ற மழைநீரை 
சேமிக்காமல் என்மீது 
பழிசுமத்துவதும் நீதானே ?

சீர்செய்யாது சீரழித்து 
தூர்வாராது ஏரிகுளங்களை 
நிலமாக்கியதும் நீதானே ?

அணைக்கட்டி ஆழப்படுத்தி 
நீர்நிலைகள் உருவாக்காமல் 
மாடிகளாய் மாற்றியதும் நீதானே ?

நிழல்தந்து உயிரனங்களின் 
நெஞ்சங்களை குளிர்விக்கும் 
மரங்களை வெட்டியதும் நீதானே?

நீவாழ்ந்திட யாமளித்த 
கணிமங்களை அழித்திடும்
கல்நெஞ்சு மானிடனும் நீதானே ?

இயற்கையின் கொடையை 
இதயமின்றி புறக்கணித்தால் 
இனி வாழவும் வழியேது ?

நிந்திக்காமல் சிந்திப்பாய் 
நித்தமொரு அறிவுரையா
நீயெழுதும் கவிதைகளில் 
நீள்கிறது வரிகளுமென !

பொதுநல சிந்தனையே 
பொழுதும் என்நெஞ்சில் 
மொழிவதும் என்கடமை 
மெய்யிதும் உரைப்பது !

இயற்கையைக் காப்போம் 
தலைமுறைத் தழைத்திட 
தவறேதும் இழைக்காமல்
இன்பமுடன் வாழ்வோம் !

குமாரு. யோகேஸ்