இரவு வந்து துாங்கச்சொல்லி அழைத்தது!கவிதை சுபாரஞ்சன்

காயப்பட்டுக் காய்ந்து போன
நினைவுகளை
களைந்து விட்டு
விரைந்து வரச் சொல்லி அழைக்கும்
இந்த இரவுற்கு ஈரமனசு…..

உழைப்பின் களைப்பை போக்கி
உறக்கம் கொண்டு தெளிந்து
பணிக்கு போக……

விடியும் வரை இரவல் தந்து
நல்ல கனவைத் தந்து
விலகிப் போகும் வரை
என் மடியை இரவல் தருகிறேன்
வா என அழைக்கிறது……

!கவிதை சுபாரஞ்சன்