இலக்கிய உலகத்திற்கு ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்த இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் பிள்ளைகள்

கடந்த 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் சால்புறுக்கனில் St.Ingbert நகரில் இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் (பூவரசு சஞ்சிகை ஆசிரியர்) இந்துமகேஷ் அவர்களது படைப்புலகம் என்னும் நூல்வெளியிடு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நூலை அவரது பிறந்தநாள் பரிசாக அவர்களது பிள்ளைகள் வெளியிட்டு னர்.
அவரது வாசகர்கள் நிறைந்த அவையில் ஓர் நிறைவான விழாவாக அமைந்தது. முதல்பிரதியை திரு.செ.செல்வகுமார் அவர்கள் (புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியத்த தலைவர் யேர்மனி – ராட்டிங்கள்) பெற்றுக்கொண்டார்.
சிறப்புரையாற்றிய வெற்றிமணி ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் இந்துமகேஷ் அவர்களை எவ்வாறு உள்வாங்கிக்கொண்டார் என்பதனையும், அவரது எழுத்தில் உள்ள யதார்த்தத்தையும் எடுத்துரைத்து வெற்றிமணி மற்றும்; சிவத்தமிழில் வந்த பல கட்டுரைகள் இந்த நூலை அலங்கரிப்பது கண்டு பெரிமிதமடைவதாகவும் குறிப்பிட்டார்.