இவர்கள்…

நாகரிகத்தின்
உச்சத்தில் வாழும்
நரிகள்…
நாட்டுக்கும்
நட்புக்கும்
கேடானவர்கள்.
கோட்பாடு
கொள்கை
குறிக்கோளில்லாதவர்கள்.
அறவழி
நெறிமுறை
அறியாத அரக்கர்கள்.
மனிதனெனும்
போர்வைக்குள்
சுருங்கி வாழும்
வஞ்சகர்கள்.
வையத்தை
காவு கொள்ளும்
கொடூரமானவர்கள்
விழிப்போடிருங்கள்..

ஆ;கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி