இவர்கள்.

அகத்தின்
அழகினை
முகத்தில் காணும்
அறிவை
வளர்த்தவன் மனிதன்.

இவர்கள்
தம் சுகத்தின்
தேவைகளுக்காய்
முகத்திலும்
மாற்றத்தை விரும்பியவர்கள்.

நிஜத்தை
தொலைத்து
நிறங்களையும்
மாற்றும் வல்லமை
பொருந்தியவர்கள்.

பேராபத்தின்
பிரசவத்துக்கு
காரண கர்த்தாக்கள்
சொல்லும் செயலும்
விபரீத அறுவடைகள்.

சமுதாய
சீர்கேட்டிற்கு
துர் நாற்றமெடுக்கும்
சாக்கடைகள்
சாத்தானின்
அவதாரங்கள்
அவதானிப்புடன்
நகருங்கள்…

கவிஞர் தயாநிதி