ஈழத்து இளைஞர்களின் கலை ஆர்வம் – „கொடிகாமப் பெண்ணே“ இறுவட்டு வெளியீடு!

யாழ் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியின் 2019 கலைப் பிரிவு மாணவன் செல்வன் எம்.எம்.கேசரனின், கொடிகாமம் பெண்ணே இறுவட்டு வெளியீட்டு விழா நேற்று (17.02.2019) நடைபெற்றது.

கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில், ஆசிரியர் திருமதி இராகினி விஜயரத்தினம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

 

பழைய மாணவரும் இலங்கை மின்சார சபை உத்தியோகத்தருமான கே.அமல்ராஜ் மற்றும் விருந்தினர்கள் இறுவட்டை வெளியிட முதன்மை விருந்தினர் முதன்மைப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக தென்மராட்சிக் கல்வி வலய சங்கீத பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி புனிதகுமாரி ஈழநேசன், சிறப்பு விருந்தினராக கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி அதிபர் க.மங்களேஸ்வரன், கௌரவ விருந்தினராக திருநாவுக்கரசு மத்திய கல்லூரி ஓய்வு நிலை ஆசிரியர் திருமதி விமலா இரவீந்திரன், ஆசிரியர்கள், கலை ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.