உடுப்பிட்டியில் உயிர்வரை இனித்தாய்

உயிர்வரை இனித்தாய் திரைப்படம் நாளை உடுப்பிட்டி நிமலேந்திரா மினி திரையரங்கில் 14.30 – 18.30 ஆகிய இரு காட்சிகள் காண்பிக்கப்பட உள்ளது.

யாழ். ராஜா திரையரங்கில் சென்ற ஆண்டு ஒன்பது காட்சிகள் காண்பிக்கப்பட்ட பின் அடுத்த சுற்றாக மினி திரையரங்குகளில் பயணத்தை ஆரம்பிக்கிறது.

அதேவேளை மேலும் பல பெரிய திரையரங்குகளிலும் காண்பிக்கப்பட இருக்கிறது.

பணிகளை இப்போது அலைகள் அனுஸ்க் முன்னெடுத்துள்ளார்.

இப்போது பல்வேறு பணிகளையும் ஆற்றலுடன் செய்துவரும் இந்த இளைஞர் நாளை இரண்டு காட்சிகளையும் ஹவுஸ் புல் காட்சிகளாக காண்பிக்க ஏற்பாடு செய்திருப்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.

கடந்த 2005ம் ஆண்டு போர் நடைபெற்று சமாதானம் நிலவிய காலத்தில் அலைகள் மூவீஸ் பூக்கள் திரைப்படம் திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக அமோக வெற்றி பெற்றது.

மக்கள் திரையரங்கின் வெளியில் நின்றும் பார்த்தார்கள்.

அப்படியொரு வெற்றி இப்போது சாத்தியமா என்பது கேள்வியே என்றாலும்

உயிர்வரை இனித்தாய் திரைப்படத்திற்கும் அதுபோல பேராதரவு கிடைத்துள்ளதாக உடுப்பிட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

ரியூப்தமிழ் அனுசரணையில் காண்பிக்கப்படுகிறது.

அலைகள் 13.04.2018