உடுவிலூர்க் கலா எழுதிய மரபின் விழுதுகள், என் சுவாசக் காற்று ஆகிய இரு நூல்களின் 28.10.2022 சிறப்புற வெளியிடப்பட்டுள்ளது.

28.10.2022வெள்ளிக்கிழமை உடுவிலூர்க் கலா எழுதிய மரபின் விழுதுகள், என் சுவாசக் காற்று ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா சுன்னாகம் பொது நூலக மண்டபத்தில் வலி தெற்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு இ மயூரநாதன் நடைபெற்றது.

உடுவில் நல்லாயன் திருச்சபையின் குரு அருட்திரு. டானியல் ரஞ்சித் அவர்கள் ஆசியுரை வழங்க
சுன்னாகம் சிவன் சிறுவர் கழக மாணவியரின் தமிழ்த்தாய் வாழ்த்தும் வரவேற்பு நடனத்துடனும் நிகழ்வு இனிதே ஆரம்பமானது.

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வலி தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் இரு நூல்களையும் வெளியிட்டு வைத்தார்.

சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்டக் கலாசார உத்தியோகத்தர் திரு இ கிருஷ்ணகுமாரும், ஓய்வு பெற்ற அதிபர் கவிமாமணி க ஆனந்தராஜாவும் கௌரவ விருந்தினராக தெளிப்பளை யூனியன் கல்லூரி ஆசிரியர் த ஸ்ரீபிரகாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

வரவேற்புரையை யாழ் வேம்படி உயர்தரப் பெண்கள் பாடசாலை ஆசிரியர் திருமதி ஸ்ரீ தமிழினி நிகழ்த்தினார்.

ஏற்புரையும் நன்றியுரையும் நூலாசிரியர் வழங்கினார்.

நூலின் முதற் பிரதிகளை வண். வடமேற்கு கண்ணகை அம்மன் ஆலயத் தலைவர் திரு ந கந்தையாவும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகத் தலைவர் திரு றொணி கஜனும் பெற்றுக் கொண்டனர்.

பல்வேறு ஆளுமைகளும் புலமைகளும் பெரியோரும் நிறைந்திருந்த மண்டபத்தில் நிகழ்வு இனிதே நடந்தேறியது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert