உனக்காவே நான் வாழ்கிறேன்!கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

கண்களை நான் பார்க்கும் போது
எண்ணங்களை காண்கின்றேன்
தூர தேசம் நீ வாழ்ந்தாலும்
என் அருகில் போல் உணர்கின்றேன்

உன் இதயமென்ற சுவர்க்கத்துக்குள்
என் இதயம் வாழவில்லை -ஆனால்
நீ பேசாத நாட்களெல்லாம்
விடியலைக்காணவில்லை

இருட்டுக்குள் மாட்டிக்கொண்டு
உன் விழி ஒளியில் வாழ்கின்றேன்
அணைத்திட தோன்றுகின்றது பெண்ணே
அய்யோ முடியவில்லை

காதலெனும் ஊசுமுனையில்
காத்திருக்கின்றேன் வலிக்கவில்லை
காலமெல்லாம் உன்னோடு வாழ்வதற்கு
யுகங்களாக காத்திருப்பேன்
எத்தனை வலியென்றாலும்
உனக்காவே நான் வாழ்கிறேன்

ஆக்கம்  -மட்டுநகர் கமல்தாஸ்