உன்பாலே….கவிதை கவிஞர்தயாநிதி

மூச்சும்
பேச்சும்
தமிழ் வீச்சும்
நீயானாய்…

விழியாலே
மொழி பேசும்
சுந்தரத் தமிழ்
பா ர் வையானாய்.

எண்ணங்களில்
நிறைந்து வண்ண
வரிகளில் வாழும்
என் தமிழாலே…

காதலுக்கு
இத்தனை வலிமையா
வலிக்காத வாழ்வில்
வழி காட்டி நீயானாய்..

சிந்தனையாவும்
சீமாட்டி உன்பாலே
ஓ..விழி உயர்த்திவரே
அன்னை தமிழும்
பெண் தானே
போற்றுவோம்..வாரீர்.

ஆக்கம் கவிஞர்தயாநிதி