உன் நிலம்!கவிதைதே.பிரியன்

உன் நிலம் உள்ளவரை
உனக்கேது கவலை

பொன் விளையும் பூமியிது
எப்போதும் கலங்காதே

உன்னிலை அறிந்ததால் தான் நீ
உழைப்பாளி வருந்தாதே

பூமியை கொத்த தெரியாதெனில்
சாமி இடம் வரம் கேட்டு என்ன பயன்

வியர்வை மண்ணில் சிந்தாவிடில்
உயர்வை நீ யாசிப்பதில் ஏது பலன்

தே.பிரியன்