உயரத்தில்… பரமநாதன்

மாணிக்கம்
ஐயாவின்
உண்மையின்
உருவம்..
கலையே இவன்
இயக்கம்.

மாலிக் கபூர்
சுப்பிரமணியம்
பூங்கா எனும்
நவீன நாடக
முழக்கம்..

ஊரில்
ஊறிய காத்தான்
கூத்தின்
தாக்கம்…

இன்று
ஐரோப்பாவில்
இவன் மகளில்
தொடக்கம்.

பாடகனாகிடும்
கனவில் இலங்கை
வானொலியில்
அரங்கேற்ற வாய்ப்பு
தடம் மாறிய
கலக்கம்..

வளர்ச்சிப்
பாதைகளில்
நடிகனாய்
பாடகனாய்
கூத்துக் கலைஞனாய்
காத்தான் கூத்து
அண்ணாவியாகி
அகிலத்தில் அழகிய
கலைப் பதிப்பு.

கலை வளர்
நிலை உச்சமெனினும்
மனிதனாய்
பண்பாளனாய்
மதிக்கப் படும்
இவன் பலருக்கு
வெளிச்சம்…
வாழ்க நின் பணி.

ஆக்கம் கவிஞர்தயாநிதி