உயர்வான காதல்!!கவிதை ஜெசுதா யோ

 

சின்னச் சின்னச் உன்
செல்லச் சண்டைகள்
என் இதயத்தில்
மாறாத இன்பவலிகள்

எத்தனை கோபம் வந்தாலும்
உன்னோடு பேசாது
ஒரு நொடிகூட நகருதில்லை
நாட்களில்,..

அருகில் இல்லை
ஆனாலும் ஆயிரம் முறை
உன் அழைப்பை எதிர்பாக்கும்
என் இதயம் ,..

உன் ஒரு நொடி பேச்சில்
இழந்த என் இன்பங்களை
மீளப் பெறுகிறேன்…
புரியாது பிரிந்திடாதே
உயிர் உள்ள சில காலம்
உன் அன்பு மட்டும்
எனக்கு துணையாகட்டும்..

ஆக்கம் ஜெசுதா யோ