உள்மனம்……!கவிதை சுபாரஞ்சன்

காற்றும் நாற்றும் நடனமிட
நானாட வேண்டாமோ…

ஆற்றுநீர் பாய்கையிலே
நான் பேச வேண்டாமோ….

பூக்களைப் பார்க்கையிலே
புன்னகைக்க வேண்டாமோ….

சிந்துகின்ற மழைத்துளியில்
சேர்ந்து நனைய வேண்டாமோ….

ஒளி கொண்ட திசையிலே
விழி திறக்க வேண்டாமோ….

பாடுகின்ற பறவையோடு
சேர்ந்து பாட வேண்டாமோ….

வானத்தைப் பார்க்கையிலே
வலி மறக்க வேண்டாமோ

அழுகின்ற ஜீவனுக்கு
அன்பு காட்ட வேண்டாமோ….

இன்பதுன்பம் இரண்டிலும்
இயற்கையோடு மகிழ்ந்திட வேண்டாமோ…

ஆக்கம்  சுபாரஞ்சன்

Merken