உழைப்பாளர் திருநாள் உயர்வான பெருநாள் வாழ்த்துக்கள்

தேசம் இருண்டிடாதோர் 
சேவை பல செய்வோம் − தம்
உழைப்பில் பலர் வாழும்
நிலைகள் நாம் செய்வோம்−

ஆசைத் தமிழ் நிலத்தில் −புது
ஆக்கம் பல புனைவோம்
ஏழை நிலம் அல்ல இது − நிதம்
ஏக்கம் களைய வைப்போம்,

இதுதான் தொழில் என்று −நம்
நிலையை மாற்றியுமே
எதையும் செய்வோமே – என
எழுந்து நடப்போமே.

.தே.பிரியன்.