ஊடக போராளிக்கு யாழ்ப்பாணத்தில் மணிவிழா…. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஏற்பாடு

தலைநகர் கொழும்பில் மாபெரும் மணி விழா கண்ட ஊடக ஜாம்பவான் ஊடகப் போராளி உதயன் மற்றும் சுடரொளி ஆகிய பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியர் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திருவாளர் வித்தியாதரன் அவர்களது பிறந்த நாள் மணி விழாவினை யாழ்ப்பாணத்திலும் கொண்டாடுவதற்கான ஒழுங்குகளை யாழ் ஊடக நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் ஆதரவுடன் உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தின் இலங்கை கிளை மேற்கொண்டு வருகிறது அதற்கான திகதி , விழா இடம் பெறும் இடம் மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் அச்சமயம் வடக்கு கிழக்கில் வாழுகின்ற ஊடகவியலாளர்கள் நலன்விரும்பிகள் முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு அவரை வாழ்த்தி கவுரவிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும்