எங்களூர் கவிஞன். தே.பிரியன்.


இவன்
வரிகளில்
ஈழத் தமிழரின்
வலிிகள் நிறைந்திருக்கும்..
வலிக்காமல்
வாழ்க்கை
யாரையுமே விட்டு
வைத்ததில்லை
இவன் மட்டும்
விதி விலக்காகிடுமா…
முகநுலின்
மூலம் ஆற்றல்
அறிந்து அறிமுகத்தோடு
வாழ்த்தும் எழுதி
வருகைக்கு புள்ளி
போட்டேன்..
இன்று இவன்
கோலம் அழகாகப்
போட்டு உயர்கின்றான்.
சோகம் வீரம்
விடியல் என் எழுச்சியாக
எழுதி வந்தவனிவன்..
இன்று மனிதனுக்குள்
உயிர்க்கும் காதலை
பாட்டாக எழுதி
இசையோடிணைத்து
இறுவட்டாக்கி 29.07.2018
வெளியிடும் செய்தியறிந்து
நெகிழ்ந்தேன்.
கொண்டைக்காரியெனும்
முகவரி கொடுத்து
மக்கள் செவிகளுக்கும்
மனதுக்கும் இதம் சேர்க்கும்
இறுவட்டாகி ஆனந்த கும்மி
அடித்துவான் பரப்பில்
இவன் பாடல்கள்
உச்சம் தொட நல் வாழ்த்துக்கள்..