எத்தனை பிறவி எடுத்தாலும்


புத்தம் புதுப்பொய்கள் சொல்லியெனை,
புண்படுத்திய பின்னரே செல்லமாய் ,
புன்னகைத்துப் பரிகசித்து என்னைப்
புதினப்பட வைத்திடுவான் அவன்
*
சத்தமிடாது சலனமின்றியே பல
சாகசங்களைப் புரிந்து காட்டி
சடுதியாய் எனை ஏய்த்தும் சில
சங்கடங்கள் செய்திடுவான் அவன் ,
*
முத்தம் கேட்டே தினமும்
முரண்டு பிடித்து என்னிடம்,
முடிவில் அவனே வென்று, எனை
மூர்ச்சையாக்கி கொன்றிடுவான் அவன் .
*
அத்தனை குறும்புகளையும் தினமும்
ஆசையாசையாய் ருசித்து ரசிப்பேன்,
ஆனாலும் அவனிடமோ நான்
அலட்சியமே காட்டி நடிப்பேன்.
*
எத்தனை முறைதான் நான் பிறவி-
எடுத்து இப்புவியிலே பிறந்தாலும்,
என்னவனின் அன்புப் பிடிக்காகவே
ஏங்கித்தவித்து காத்திருப்பேன் .
குறும்பு நேசன்