எந்தன் வரிகளில்…

தனிமைக்கு துணையாக
தமிழோடு உறவாடி
எழுதிச்செல்லும் வரிகளுக்குள்ளே
வேதனைகள் மறைந்திருக்கும்
சோதனைகள் இழையோடியிருக்கும்..

கற்பனையினில் கருவாகி
சொப்பனத்தில் நான் காணும்
காட்சிகளின் பிரதியென்று
பொய் சொல்லிப் போகாத
யதார்த்த நிலை அங்கு இருக்கும்…

குரலிழந்த குயிலாக
ஆட மறந்த மயிலாக
ஊமையான கூண்டுக்கிளியின்
கனவுகளின் நிழலாக
உயிர் கொடுக்கும் வரிகளுக்குள்
உயிர்வலி நிறைந்தே இருக்கும்…..

காதலின் ஸ்வரங்கள்
கண்ணியமாக வரிகளுக்குள்
ஒளிந்திருந்து எட்டிப்பார்க்கும்
காரிகைகளின் அவலங்கள்
கொட்டிய வரிகளுக்குள்
கண்ணீர் நிறைந்திருக்கும் ..

ரதி மோகன்
ஓயாதகவியலைகள்