***என்னவனின் அந்த செயல் ***


என்னவன் என்னை திட்டும் பொழுதுககளில்
ஏனோ நானும் இந்த உலகையே வெறுக்கிறேன் .
என்னால் முடிந்த வரைக்கும்
எனக்குள்ளேயே கொஞ்சம் அழுதும் தீர்ப்பேன் .
என் விருப்பப் பொருளைஅவன்
எனக்கு வேண்டித்தராத போது,
என்மனதில் ஒரு சிறு சினம்
எழுந்தது மறைவதும் , உண்மைதான் ,
எல்லோர் மத்தியிலும்
என்னையவன் கடிந்து கொள்ளும் போது
ஏன் இந்த பிறவி எடுத்தேனோ?
என்று இறைவனையே கடிந்து கொள்வேன் ,
எத்தனை துன்பங்களையும் அத்தனை
எளிதாக்கி விடுகிறது .
என்னவனின் அந்த செயல் ????????

(என்னை மட்டுமே அவன் மனதில்
எப்போதும் எண்ணிக் கொண்டுள்ளான்.
என்ற ,அந்த ஒரு செயல் போதும்..
என்னவன் என் இறைவன் ஆகினான் .)
__ தார நேசன்