என்னவனே…!கவிதை கவித்தென்றல் ஏரூர்

என் கற்பனைகளை கழுவிச் செல்கிறது
உன் நினைவுகள்
சிறு கைக்குட்டைக்குள் அடங்கிறது
என் கண்ணீர் துளிகள்

ஒவ்வொரு இராப்பொழுதுகளில்…
உன் கனவுகளில் வழுக்கி விழுந்து தவிக்கிறேன்
சுமைகளை இதயம் தாங்க துடிக்கிறேன்

ஊமையாய் இருந்த என் உணர்வுகளெல்லாம்
உயிர் விடுகிறது உடலில்..
உண்மையை குறை கூறுகிறது
உன் பார்வையும் வார்த்தையும் என் நிழலில்..

மிச்சமுள்ள உன் ஞாபகமாய்
உன் புன்னகை புகைப்படத்தில்
எச்சம் பண்ணிய அலைபேசி இன்னும்
என் கையில்..

சல்லாப வார்த்தைகளை துப்பினாய்
சல்லடையாகியது சபலம்
சங்கீதமாக என் காதில் உதயம்

உள்ளாடையின் தூக்கம் கலைத்தாய்
ஊக்குகள் தெறிக்க..
கல்லாத கலவியில் காமனாய் நுழைந்தாய்
என்னை வதைக்க

வில்லாதி வில்லானாய் உதித்தாய்
இரவை எரிக்க..
வீணாகிப் போனது நம் காதலை
நாமே பிரிக்க…

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்