என் உயிரே!கவிதை ஜெசுதா யோ

காற்றில்லாத
வெற்றுக்கூட்டில்
சுவாசமின்றி நான்
உயிர் உண்டு
உணர்வில்லை
பேச்சின்றி
மூச்சின்றி இருந்தும்
அந்தக்கணம்
என் இறுதியாகக் கூட
இருந்திருக்கலாம் -ஆனாலும்
என் நினைவில்
நீயும் என் சேயாகி
நினைவில் நிறுத்தி
கண்ணீர் துளி மட்டுமே
கண்களில் இருந்து
கன்னங்களை வருடிச் செல்ல
என் கண்ணீருக்குள்
உன் மீதான எனது
அளவுகடந்த அன்பு
ஊற்றாகவே இருந்தது
என்றும் நீ என் உயிரே
நீ வெறுத்தாலும்
என் இறுதிக் கணத்திலும்
உன் நினைவோடு போகும்
என் உயிரே…

ஆக்கம் ஜெசுதா யோ