என் சுவாசம்.

உனக்கான
நினைவுகளே
என் வாழ்வின்
எச்சம்..எனி
ஏது மிச்சம்…
எண்ணம்
நீ.
வார்த்தைகளின்
வண்ணம்
நீ.
கொட்டும்
வார்த்தைகளின்
கடுமை
எனை
வதைப்பதில்லை..
நீ
உதைப்பதும்
வலிப்பதில்லை..
ஏனெனில்
நீ
என் நேசம்
நீ
என் பாசம்
நீ
என்வாசம்
இதையும் தாண்டி
நீயே
என் சுவாசம்…

ஆக்கம் கவிஞர் தயாநிதி பிரான்ஸ்