என் நிழலோடு வருகின்றாய்..

என் வாழ்வில் வந்தாயே….
என்னோடு வாழ்ந்தாயே….
என்னை மாற்றி வைத்தாயே ..
அன்பை அள்ளி விதைத்தாயே..
என்னை விட்டு பிரிந்தாயே .

தூக்கத்தில் இருக்கையிலே -நீ
ஏக்கத்தில் பார்க்கின்றாய் …
தனிமையில் நடக்கையிலே -என்
நிழலோடு வருகின்றாய்….
என்னைவிட்டு மறைந்தாயே ..
அந்த காற்றில் கரைந்தாயே …

சமையலறை வந்தால் -உன்
சத்தம்தான் கேட்கிறது…
உணவை உண்கையிலே .உந்தன்
உருசிதான் தெரிகிறது ..என்
நெஞ்சுக்குள் இருக்கின்றாய்..எந்தன்
நினைவோடு வருகின்றாய்…

இனியொரு பிறப்பிருந்தால் -நாம்
ஒன்றாக இணைந்திடணும்
ஆளாளுக்காகத்தான் -நாம்
அப்போதும் வாழ்ந்திடணும் -நம்
அந்திமக் காலம் மட்டும் -நாம்
அன்பாக இருந்திடணும்

கோவிலுர்.சொல்வராஐா