***என் பிறப்பு***

உங்கள் உதிரத்தில் அன்று நான் உருவாகினேன்
உங்கள் சரீரத்தில் நன்றே ஒரு
கருவாகினேன்
உங்கள் ஊட்டத்தால் உறுதியான சிசுவாகினேன்
உங்கள் மடிதனில் அன்புமகனாய் பிறந்தேன் .
உங்கள் கைகளில் பாசமழலையாய்த்
தவழ்ந்தேன்.
உங்கள் கால்களில் நான் சுகமாய்
உறங்கினேன்
உங்கள் தோளிகளில் உரிமையோடு
விளையாடினேன்.
உங்கள் உறவால் எனுடன்பிறப்புகளோடு
ஒருவனானேன் .
உங்கள் பராமரிப்பில் பகுத்தறிவோடு வளர்ந்தேன்
உங்கள் அரவணைப்பால் உலகையே
அறிந்தேன் .
உங்களால் தான் இன்று நான் மனிதனாய்
வாழ்கிறேன்
உங்களை என்றும் என் மனத்தில்வைத்து பூஜிப்பேன்
சதி ஈசன்