எம் வீர இலக்கணம்!கவிதை பாவநேசன்

 

எமைப் பார்த்து சிரிதத்தால்த்-தான்
எதிரியின் வீடு எரிகிறது என்றால்.
எதைப் பார்த்து நாம் சிரித்ததால்
எமது வீடுகள் தீக்கிரையாகின அன்று.
எமை வாழ வைக்கும் இயற்கை தரும்
எந்த சீற்றங்களையும் ஏற்றுக் கொள்வோம்,
எமைப் படைத்த இறை போதனைகளால்
எல்லோரையும் தேற்றிக்கொள்வோம் ,
எம்மால் முடிந்த வரை மனிதாபிமானத்தை
எதிரியின் மத்தியிலும் காட்டுவோம்.
எமைக் கொன்றவன் எப்பொழுதேனும்
எம்கையால் இறக்கவேண்டும் என்பதே
எத்தேசத்தினதும் வீர இலக்கணம்,
ஆக்கம் பாவநேசன்