எல்லைகள் ஏது…!கவிதை கவிஞர் தயாநிதி

 

நூலைப்
படி…
நுண் கலையைப்
படி..!

ஊரைப்
படி
உறவைப்
படி..!

உலகைப்
படி
உண்மையைப்
படி..!

உன்னோடு
இருப்பவரைப்
படி
உனக்கு முன்
இருந்தவரைப்
படி..!

எல்லாம்
படித்தாலும்
படிக்க
வேண்டிய
உன்னையும்
படி..!

படிப்புக்கு
எல்லைகள்
ஏது?
எப்பிடி நீ
படித்தாலும்
படித்துக்
கொண்டே
இரு..!

வாழ்க்கையும்
பள்ளிக்கூடம்
வழுக்காமல்
இருந்திட
மறக்காமல்
படி..!

ஆக்கம் கவிஞர்தயாநிதி