எழுது கலம்.

என்னோடு
எழுது கலம்
என்னாளும்
என் துணையிருக்கும்.
சொல்லுக்கு
சிலம்பு கட்டி
காற்றலையில்
கவிதைகள்
கதக்களியாடும்
ஆற்றின்
ஓரம் அமர்ந்தபடி
காற்றின்
மொழி கேட்டு
சின்ன சின்ன
ஆசைகளை
கிறுக்கும்…
எழுதிய
பாட்டின் பொருள்
உணர்ந்து
படித்தவர்
போதாது மேலும்
வேண்டுமென
தூண்ட வேண்டும்.
ஏட்டில்
எழுதியதை
என்னவள் தன்
குரலில்
சந்தம் சேர்த்து
சிந்து பாட வேண்டும்.
மொழியின்
எழில் கண்டு
தமிழின்
வீச்சறிந்து
பொய்யா மொழி
தேவர்களும்
விழி உயர்த்த வேண்டும்.
வையத்தில்
வாழும் வரம்
தமிழுக்குண்டு
அதன் எழிலுக்கு
என் எழுத்து