ஏனென்று கேட்காதே..

ஏனென்று நீ கேட்டால்
எருக்கம்பூக்களும் கூட வாசனை
வீசும் ஆனாலும் நீ கேட்காதே..

என்ன என்று நீ விசாரித்தால்
தொட்டாற் சுருங்கி கூட
கொஞ்சம் சிணுங்கும்

என்ன என இனி கேட்காதே
என்னவென்று நான் சொல்ல
ஏனோ ஏனோ உனை மட்டும்

மலையளவு கடல் அளவு
மனதினிலே பிடிக்கிறது
நம்பத்தான்மாட்டாய் நீ
நம்பிக்கையாய் தெரியும்…

தும்பிக்கையான் மீது ஆணை
தூரத்தான் தள்ளிப்போகாதே நீ
துரத்தி துரத்தித்தான் நேசிப்பேன்
உயிர் துறக்கும் வரை..

ரதிமோகன்