****ஒய்யார நிலவே**** கவிதை அம்புலிநேசன்

ஓடும் நிலவே ஒரு நொடி நில்லாயோ
….ஒய்யாரமாய் நீயும் வானில் நீந்த,
காடும் மேடும் ஓடி நாமும் தினமும்
…..களைத்து ஓய்ந்து குடிசைக்கு வந்து,
பாடும்நிலவே உனக்காய் காத்துநின்றுன்
…..பாலொளி எம்மீது பட்டதுமே எம்மது
வாடும் உடலின் நோவும் வருத்தங்களும்
….வந்தஇடம் தெரியாது பறந்ததே போகிறது .
தேடும் போது நீ ஓடி ஒளிந்து மறைவதும்
….திரும்பவம் வந்து ஒளிவீசிஎம்மை எழுப்பி
ஆடும் கன்னாம்பூச்சியை எம் வாழ்நாளில்
……ஆராலும் மறக்கமுடியாது அம்புலியே

ஆக்கம் அம்புலிநேசன்

Merken

Merken