ஒரு நாள்…!கவிதை கவிஞர் தயாநிதி

அந்த
ஒரு நாள்
ஆனந்த
திரு நாள்..

பிள்ளைகள்
பேரப் பிள்ளைகள்
வந்தார்கள்
நின்றார்கள்.

கூடினர்
குலவினர்
கலகலத்தனர்
கலைந்தனர்…

ஒரு நாள்
ஒரு யுகம்.
நினைவுகளே
இனி சுகம்…

பெரிய வீடு
உரியவர்களின்றி
இருண்டது. என்
மனக் கூடும்…

பிறப்பும்
இறப்பும்
வருவதும்
போவதும்
தனித்தென்றான
விதியுடன்
விரும்பாமலே
வாழ்வும் இணைந்தது…

ஆக்கம் கவிஞர்தயாநிதி