கனடா கந்தசுவாமி ஆலய பக்திப் பாடல்கள்“ ஒலிப் பேழை வெளியீட்டு விழா

கடந்த சனிக்கிழமை மாலை கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற “ கந்தசுவாமி எங்கள் தந்தை சுவாமி“ என்னும் பக்திப் பாடல்கள்“ ஒலிப் பேழை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பெற்ற படங்கள் இங்கே காணப்படுகின்றன.

பைரவி நுண்கலைக் கூடத்தின் அதிபர் திரு ஜெயச்சந்திரன் ஆசிரியர் அவர்களின் குழுவின் வெளியீடாக இன்முகம் கொண்ட இசையமைப்பாளர் சி. சுதர்சன் அவர்களின் இசையமைப்பில் தயாரிக்கப் பெற்ற இந்த ஒலிப்பேழையில் கனடா மற்றும் தாயக கவிஞர்கள் எழுதிய பத்துக்கு மேற்பட்ட பாடல்கள் கனடா வாழ் பாடக பாடகிகளால் பாடப்பெற்று பதிவுசெய்யப் பெற்றுள்ளன.

இந்;த “ கந்தசுவாமி எங்கள் தந்தை சுவாமி“ என்னும் பக்திப் பாடல்கள்“ ஒலிப் பேழையில் கனடா மற்றும் தாயகத்தில் வாழும் கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கு இன்முகம் கொண்ட இசையமைப்பாளர் சி. சுதர்சன் அவர்கள் இசையமைக்க, பைரவி நுண்கலைக் கூடத்தின் அதிபர் திரு ஜெயச்சந்திரன் ஆசிரியர் அவர்களின் மேற்பார்வையில் கனடாவில் வாழும் பாடக பாடகிகள் மற்றும் இளம் பாடகிகள் ஆகியோர் தங்கள் குரல் வளத்தால் பாடல் வரிகளுக்கு இசை நிறைந்த அங்கீகாரத்தை வழங்கும் வகையில் குரல் கொடுத்துள்ளனர்.
இந்த வெளியீட்டு விழாவில் சேகரிக்கப் பெற்ற நிதித் தொகை கனடா கந்தசவாமி ஆலய நிர்வாக சபையிடம் கையளிக்கப்பெற்றது